Our Feeds


Friday, April 11, 2025

Sri Lanka

போக்குவரத்து விதி மீறல் | GovPay மூலம் அபராதம் செலுத்தி “லைசனை” உடனே பெறலாம்.



சுத்தமான இலங்கை இத்திட்டத்தின் கீழ், இலங்கை காவல்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டமாக, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்களை உடனடியாக செலுத்தும் முறை GovPay விண்ணப்பத்தின் மூலம் ஆன்லைனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


வாகன ஓட்டிகள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு காவல் துறை அதிகாரிகள் வழங்கும் அபராதத் தொகையை தபால் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று செலுத்தி, ஓட்டுனர் உரிமத்தை திரும்பப் பெறுவதற்கு காவல் நிலையங்களில் சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதே தற்போதைய முறை.


ஆனால் அபராதத் தொகையை GovPay விண்ணப்பம் மூலம் ஆன்லைனில் செலுத்தி, குறுஞ்செய்தி மூலம் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உறுதி செய்த பிறகு, ஓட்டுநர் உரிமத்தை அதே நேரத்தில் பெறமுடியும்.


இதன்படி, இந்த முன்னோடித் திட்டம் 11.04.2025 முதல் 30.04.2025 வரை குருநாகல், தொரட்டியாவ, மல்சிறிபுர, கொகரெல்ல, கலேவெல, தம்புள்ள, மடத்துகம, மரதன்கடவல, கெக்கிராவ, திரப்பனை, கவரக்குளம் மற்றும் அநுரதபுரக்குளம் ஆகிய வீதிகளை உள்ளடக்கியதாக அமுல்படுத்தப்படவுள்ளது.


இதன் மூலம் இந்த முன்னோடி திட்டத்தில் உள்ள சிரமங்களையும் குறைபாடுகளையும் கண்டறிந்து அவற்றை சரிசெய்து இலங்கை காவல்துறை இத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »