இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை
விஜயத்தின் போது, வீதியைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து தெரு நாய்களை அகற்றுமாறு இலங்கை அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளதாகவும், அதற்கு விலங்குகள் நல அமைப்புகளும் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது விலங்குகள் நலனுக்கு எதிரானது, நெறிமுறையற்றது, விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது மற்றும் நீண்டகால மனித - நாய் மேலாண்மை திட்டங்களை மீறுகிறது என்று தெரிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், இலங்கையில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்களின் குழுவான RARE Sri Lanka, இன்று வியாழக்கிழமை (03) கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.