Our Feeds


Sunday, April 13, 2025

Sri Lanka

சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாடு - 3 பதக்கங்களை தட்டித் தூக்கியது இலங்கை.



தாய்லாந்து சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணியினர் 44 நாடுகளுடன் போட்டியிட்டு 3 வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றனர். 

 

தாய்லாந்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. 

 

இதன் போது நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் மட்/பட்டிருப்பு தேசியப் பாடசாலை இரசாயனவியல் ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தலைமையில் இலங்கை அணியினர் பங்குபற்றினார்கள். 

 

இலங்கை அணியில் பிரபலப் பாடசாலைகளைச் சேர்ந்த 6 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

 

சர்வதேச ஆராய்ச்சிக் குழு, செல்வராஜா தேவகுமார் ஆசிரியரை அங்கு நடைபெற்ற பல்வேறு போட்டி நிகழ்வுகளுக்கு நடுவராகப் பணியாற்றவும் அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »