நாட்டில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுவதாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
பெண்கள் மத்தியில் இறப்புக்கு மார்பகப் புற்றுநோய் முக்கிய காரணம் என்றும், ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 19,000 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாக சுகாதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.