சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் கிறிஸ்டி கவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கிரேக்க நாட்டின் கோஸ்டா நவரினோவில் நடைபெற்ற 144 ஆவது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டத்தில் 10-வது தலைவராக கிறிஸ்டி கவென்ட்ரி தெரிவு செய்யப்பட்டார்.
தலைவருக்கான போட்டியில் 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களுக்குள் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 41 வயதான சிம்பாப்வே விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த கிறிஸ்டி கவென்ட்ரி வெற்றி பெற்றார்.
முதன்முதலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாமஸ் பாக், ஜூன் மாதம் பதவி விலக அவருக்குப் பின்னர் கிறிஸ்டி கவென்ட்ரி ஜூன் 23 ஆம் திகதி பதவியை பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
41 வயதான முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனையும் தங்கப் பதக்கம் வென்றவருமான இவர், இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி மற்றும் ஆபிரிக்கர் என்பது சிறப்பம்சமாகும்.
இது குறித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கிறிஸ்டி கவென்ட்ரி தெரிவிக்கையில்,
"சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், உற்சாகமாக இருக்கிறேன்! என் சக உறுப்பினர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்களுக்கு முன்பு ஜிம்பாப்வேயில் நீச்சல் அடிக்கத் தொடங்கிய இளம் பெண் இந்த தருணத்தை ஒருபோதும் கனவிலும் நினைத்திருக்க முடியாது.
"ஐஓசியின் முதல் பெண் தலைவராகவும், ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முதல் பெண் தலைவராகவும் இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வாக்கெடுப்பு பலருக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் ஒரு முன்மாதிரியாக எனது பொறுப்புகளை நான் முழுமையாக அறிவேன்," என்று தெரிவித்தார்.