Our Feeds


Wednesday, March 12, 2025

SHAHNI RAMEES

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!


அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்

விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநர் கைது செய்யப்பட்டுள்ளார். 


குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டதோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. 


இதேவேளை, இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »