Our Feeds


Wednesday, March 26, 2025

SHAHNI RAMEES

அமெரிக்க தூதுவரிடம் காசா மக்கள் தொடர்பில் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ரிஷாட்

 


இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் (26) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றது.


இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


இந்த சந்திப்பு தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன், எமது நீண்டகால தொடர்புகள் மற்றும் நிலைபேறான தன்மை குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.


இதன்போது, புனித ரமழான் மாதத்தில் காசா மக்கள் எதிர்கொண்டுள்ள பெரும் துயரங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பிலும் எமது ஆழ்ந்த கவலையை தூதுவரிடம் வெளிப்படுத்தினோம்.


மேலும், மனிதாபிமான விடயங்களை முன்னிறுத்தியும் உலக அமைதிக்காகவும் அமெரிக்கா தனது ஆதரவினை வழங்க வேண்டும்  எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »