Our Feeds


Saturday, March 22, 2025

Zameera

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – மேலும் ஒருவர் கைது


 கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபர் புதுக்கடை நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்ற அறைகள் தொடர்பாக தகவல் வழங்கி கொலைச்சம்பவத்திற்கு ஆதரவளித்தமையினால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



 சந்தேகநபர் மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுவரை கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »