Our Feeds


Wednesday, March 26, 2025

SHAHNI RAMEES

ஜெலென்ஸ்கியை சந்தித்தார் உக்ரைனுக்கான இலங்கைத் தூதுவர்!

  



உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி அண்மையில்

உக்ரைனுக்கான இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் எஸ். ஹசந்தி திசாநாயக்கவிடமிருந்து நற்சான்றிதழ் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.


 


உக்ரைன் அமெரிக்க பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் உக்ரைன் இருதரப்பு ஒத்துழைப்பை வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளதாகவும் வர்த்தகம், கல்வி, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் ஆர்வமாக இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி இச்சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »