அட்டாளைச்சேனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினரும் தொழிலதிபருமான ஏ.கே. அமீர் இன்று (27) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.
எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் கட்சியின் வளர்சிக்கு முழு மூச்சாக தானும் தனது ஆதரவாளர்களும் செயற்படுவதாக தலைவரிடம் அவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை எம்பி மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினரும் தேசிய பொருளாளரமான ரஹ்மத் மன்சூர் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட செயலாளருமான ஏ.ஸி ஜமால்தீன்,கட்சியின் உச்சபீட உறுப்பினரும் பாலமுனை அமைப்பாளருமான ஏ. எல் எம் அலியாரும் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்.