Our Feeds


Thursday, January 30, 2025

Sri Lanka

அரிசியின் கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் மாற்றாது!

யார் வேண்டுமானாலும் அதிக விலைக்கு நெல் வாங்கலாம், ஆனால் தற்போதைய வர்த்தமானி அரிசி கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் எந்த வகையிலும் மாற்றாதென விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ 120 -130 ரூபாவுக்கு நெல் வாங்குவதற்கு வணிகர்களுக்கு உரிமை இருந்தாலும், அரசு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அரிசி விலையை மாற்றாது என்று அமைச்சர் கூறினார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஆய்வு விஜயத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையில் தற்போது காணப்படும் சில பலவீனங்களை மாற்றுவதன் மூலம், கட்டுப்படுத்தப்பட்ட அரிசி விலைகளைப் பராமரிக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நெல் விலை தொடர்பான எந்தப் பிரச்சினையும் தற்போது இல்லாததால், அரசாங்கம் அதில் தலையிடாது என்றும் நெல் விலை தொடர்பான பிரச்சினை எழுந்தவுடன் அரசாங்கம் தலையிடுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறையுடன் போட்டியிடக்கூடிய ஒரு சந்தைப்படுத்தல் சபை நிறுவப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

உர மானியங்களைப் பெற்ற விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நெல்லை அவசியம் வழங்க வேண்டும் என்ற முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், அது இன்னும் விவாத நிலையிலேயே உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »