Our Feeds


Wednesday, October 23, 2024

Sri Lanka

அருகம்பேயில் இஸ்ரேலியர்கள் உருவாக்கியுள்ள வழிபாட்டுத் தளம் | சமூக ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ வெளியிட்ட Photo க்கள்



இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அறுகம் விரிகுடா பகுதியில் உள்ள கட்டிட ஆக்கிரமிப்பு ஆகியவையே கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அப்பகுதிக்கு வருகை தரும் தனது பிரஜைகளுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதற்கான பயண ஆலோசனையை வழங்க தூண்டியுள்ளது என்று இலங்கை பொலிஸ் இன்று தெரிவித்துள்ளது. 

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, சறுக்கல் உட்பட்ட பொழுதுபோக்கு செயற்பாடுகள் காரணமாக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் அறுகம் பே மற்றும் பொத்துவில் மிகவும் விருப்பமான விடுமுறை இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"அவற்றில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, ஏராளமான இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அறுகம் விரிகுடாவிற்கு வருகை தந்துள்ளனர், இதன் விளைவாக அப்பகுதியில் ஒரு கட்டிடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். இப்பகுதி தற்போது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளால் அதிக மக்கள் தொகை கொண்டதாக இருப்பதால், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து சமீப காலங்களில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது, ”என்று அவர் கூறினார். 

பூர்வாங்க நடவடிக்கையாக பொலிஸார் ஏற்கனவே வீதித் தடைகளை அமைத்துள்ளதாகவும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வழமையான சோதனைகளையும் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

பொலிஸ், விசேட அதிரடிப்படை (STF), கடற்படை, இராணுவம் மற்றும் அரச புலனாய்வு சேவைகள் (SIS) ஆகியவற்றின் ஈடுபாட்டுடன், அருகம் விரிகுடாவில் தற்போது விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை DIG தல்துவ உறுதிப்படுத்தினார். 

இதனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் விடுமுறைக் காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

அறுகம்பே பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் பயண ஆலோசனையை வழங்கியதை அடுத்து, அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

இதற்கிடையில், சமூக ஆர்வலர் ருக்கி பெர்னாண்டோ கடந்த வாரம் அறுகம் குடா பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளால் 'சினகோக்' (யூத வழிபாட்டுத் தலம்) ஒன்றை நிறுவியதை தெரியப்படுத்தினார். 

பெர்னாண்டோ, கடந்த வாரம் அருகம் விரிகுடாவில் ஹீப்ரு மொழியில் பலகைகள் கொண்ட பல ஹீப்ரு பதிவுகள், கடைகள் மற்றும் உணவகங்கள் தோன்றியதாக செய்திகள் பரவியதாக தனது எக்ஸ் இல் கூறினார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் மோதலால் இஸ்ரேலியர்கள் மீது விரோதம் உள்ளவர்கள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காகவே, “சினகொக்” பகுதியில் பொலிஸார் மற்றும் பிரதான வீதிகளில் STF படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.  

வழிபாட்டுத்தல படங்களைப் பகிர்ந்த சமூக ஆர்வலர், இது சுவர்கள் அல்லது கதவுகள் அல்லாத மின்விசிறிகள், தகரம் மற்றும் தாள் கூரையுடன் கூடிய கட்டிடம் எனவும் ஒரு மசூதியை அண்டிய பாதையில் அமைந்துள்ளது எனவும் கூறினார். 

மேலும், இரண்டு பொலிஸார் கட்டிடத்திற்குள் இருந்ததாகவும், ஒருவர் கண்காணிப்பு கோபுரத்தின் மீதும் இருப்பதாகவும், பலஸ்தீனத்தைப் பற்றி விசனப்படும் உள்ளூர்வாசிகள் அந்த பகுதியில் இஸ்ரேலின் இருப்பு குறித்து அதிருப்தியாக இருப்பதாகவும் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »