Our Feeds


Wednesday, October 23, 2024

Sri Lanka

IMF உடனான மூன்றாம் கட்ட பேச்சு தொடரும் -மஹிந்த சிறிவர்தன!


சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு தொடர்பிலான கலந்துரையாடல்களுக்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும்,

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களின் போது, நாணய நிதியத்தின் பிரதி நிர்வாக பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

நுண்பொருளாதார மறுசீரமைப்புக்கான திட்டத்திற்கான அர்ப்பணிப்பை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF ) திட்டத்தின் 3 ஆவது மீளாய்வு தொடர்பிலான கலந்துரையாடல்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »