Our Feeds


Wednesday, October 23, 2024

SHAHNI RAMEES

BREAKING: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய உத்தரவு!


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை

கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) பிடியாணை பிறப்பித்துள்ளது.


இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »