Our Feeds


Friday, October 18, 2024

SHAHNI RAMEES

இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு – மேல் மாகாணத்தில் அதிக நோயாளர்கள் பதிவு!

 


நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

அதிகரித்து வருகின்ற நிலையில், ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை 1,618 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


இதற்கமைய, இவ்வருடம் ஆரம்பித்து காலப்பகுதி வரை 41,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 17,416 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே ஆகும்.


மேலும், வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4,822 நோயாளர்களும் மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4,266 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,159 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »