Our Feeds


Monday, October 7, 2024

Sri Lanka

எம்முடன் இணைந்து போட்டியிட அரசியல் குழுக்களுக்கு இடமில்லை - தேசிய மக்கள் சக்தி!


தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையில் விருப்பு போட்டியை தவிர்க்கும் வகையில் முறைமையொன்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்கள் தொடர்பில் கட்சி தலையிடாது எனவும், மக்களின் விருப்பத்தின் பேரில் தெரிவுசெய்யப்பட்ட வேட்பாளர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடுவதற்கு கட்சிகள் மற்றும் பல்வேறு நபர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் ஆனால் அரசியல் குழுக்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் திரு.நிஹால் அபேசிங்க குறிப்பிடுகிறார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »