Our Feeds


Friday, October 11, 2024

SHAHNI RAMEES

பொதுத் தேர்தலில் நாமல் போட்டியிட மாட்டாராம்!

 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான நாமல் ராஜபக்ச 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அக்கட்சியின் நம்பகமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்னும் சமர்ப்பிக்கவில்லை எனவும் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவும் இந்த தேர்தலில் போட்டியிடாமல் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இத்தேர்தலுக்கு ஹம்பாந்தோட்டை மாவட்ட அணித் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானகவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் ஒரு கட்சி என்ற ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அவரை ஒரு மாவட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது என அக்கட்சியின் அரசியல் சபை மற்றும் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட மாட்டார் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.




ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான நாமல் ராஜபக்ச 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என அக்கட்சியின் நம்பகமான வட்டாரம் தெரிவித்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்னும் சமர்ப்பிக்கவில்லை எனவும் அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவும் இந்த தேர்தலில் போட்டியிடாமல் தேசியப்பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதன்படி இத்தேர்தலுக்கு ஹம்பாந்தோட்டை மாவட்ட அணித் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானகவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் ஒரு கட்சி என்ற ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அவரை ஒரு மாவட்டத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது என அக்கட்சியின் அரசியல் சபை மற்றும் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.


இதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நாமல் ராஜபக்ச போட்டியிட மாட்டார் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »