Our Feeds


Monday, October 21, 2024

SHAHNI RAMEES

கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வு!

 

 

விண்ணப்பிக்கப்பட்ட ஒரு தொகுதி கடவுச்சீட்டுகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.



கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.



கடவுச்சீட்டு பெறுவதற்கான தற்போதைய வரிசைகள் இந்த வாரத்திற்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.



மேலும், விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள 750,000 கடவுச்சீட்டுகளில் ஒரு தொகுதி தற்போது இலங்கைக்கு வந்துள்ளதுடன் மற்றொரு தொகுதி விரைவில் இலங்கைக்கு வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »