Our Feeds


Monday, October 7, 2024

Sri Lanka

ஜனாதிபதிக்கு எதிர்த்தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கவுள்ளோம் - திகாம்பரம்!


மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு, எதிர்த்தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கவுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது, மலையக மக்கள் தொடர்பான பல்வேறு விடயங்களைக் கலந்துரையாடியுள்ளார்.

தற்போது, மலையக மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதெனத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »