Our Feeds


Thursday, October 17, 2024

Sri Lanka

கொள்கை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து அலி சப்ரி விளக்கம்!


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை உதாரணமாகக் காட்டி, கொள்கை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"இன்று நாம் இருக்கும் நிலைமைக்கு கொள்கை முரண்பாடானது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்திய அரசாங்கம் எயார் இந்தியாவை தனியார்மயமாக்கும் முடிவை எடுத்தபோது, தேசிய பெருமைக்காக ஸ்ரீலங்கன் எயாலைன்ஸை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று எங்கள் அரசாங்கம் வலியுறுத்தியது. 2008இல் இதே போன்ற காரணங்களுக்காக எமிரேட்ஸ் நிர்வாக ஒப்பந்தத்தை நாங்கள் நிறுத்தினோம்,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த செயற்பாடுகளின் விளைவாக இலங்கை தற்போது 1.2 பில்லியன் டொலர் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் கொள்வனவுக்கான கடந்த அரசாங்கத்தின் பகிரங்க ஏலத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பில் அவரது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »