சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை வேகமாக அதிகரித்து வருவதாகவும், சில பகுதிகளில் தேங்காய் 180 முதல் 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் ஒன்று 80 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனையாளர்கள் கொள்வனவு செய்வதாக தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கொழும்பின் சில பகுதிகளில் ஆரஞ்சு பழம் ஒன்று 160 முதல் 200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.