Our Feeds


Thursday, October 10, 2024

Sri Lanka

இன்றுடன் நிறைவு பெருகிறது தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பத் திகதி!


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சுயேச்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணம் வைப்புச் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைத் தவிர, அனைத்து சுயேட்சைக் குழுக்களும் பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் வைப்புச் செய்ய வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »