Our Feeds


Thursday, October 10, 2024

Sri Lanka

நாட்டின் பல பகுதிகளிலும் நாளை பலத்த மழை!


நாட்டின் பல பகுதிகளில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

அதேநேரம், நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »