Our Feeds


Sunday, October 6, 2024

Sri Lanka

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் வௌியான அறிவிப்பு!


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவதோடு, ஏனைய வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருப்பின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான தகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளதாக எழுந்துள்ள பிரச்சினையை கருத்தில் கொண்டு, விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »