Our Feeds


Monday, October 14, 2024

Zameera

நாத்தாண்டியா - கொற்றாமுல்ல வீதி மூடல்


 ஹெமில்டன் வாவியில் அதிக நீர் வெளியேருவதால் குளியாபிட்டிய – கொழும்பு பிரதான வீதியில் நாத்தாண்டியாவிலிருந்து கொற்றாமுல்ல வரையிலான வீதி நீரில் மூழ்கியுள்ளததால் இன்று (14) காலை முதல் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 12ஆம் திகதி முதல் இவ்வீதியில் ஐந்து அடிக்கு மேல் நீர்மட்டம் தேங்கியிருந்தமையினால் வீதி முற்றாக மூடப்பட்டிருந்ததாகவும், இன்று மீண்டும் நீர்மட்டம் உயர்ந்யுததால் வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இதற்கிடையில், தும்மோதர. கொற்றமுல்ல மற்றும் மாவில ஆகிய 29 கிராமங்களைச் சேர்ந்த 1,212 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அலுவலகத்தின் அனர்த்த நிவாரண சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »