நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் இணைய தீர்மானித்துள்ளார்.
இன்று (21) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளையும் இராஜிநாமா செய்வதாகவும், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிதா அபேரத்ன எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவரது பெயர் வேட்பு மனுவில் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.