Our Feeds


Thursday, October 10, 2024

Sri Lanka

கொழும்பு மாவட்ட வேட்பாளராக கையெழுத்திட்டார் மனோ!


இலங்கையின் எட்டு மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் போட்டியிடுகின்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களில் ஒரு பகுதியினர் இன்று வேட்பு மனுவில் கைச்சாத்திட்டனர்.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் இன்று வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் சந்திரகுமாரும், கண்டி மாவட்டத்தில் அண்மையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வெளியேறிய பாரத் அருள்சாமியும் போட்டியிடவுள்ள நிலையில் அவர்களும் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »