Our Feeds


Monday, October 21, 2024

Zameera

சியரா லியோன் ஜனாதிபதி இலங்கை வருகைதந்தார்


 சியரா லியோன் நாட்டின் ஜனாதிபதி  ஜூலியஸ் மடா பியோ இரண்டு நாள் விஜயமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை, ஞாயிற்றுக்கிழமை (20) வந்தடைந்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதன் பின்னர், 09 பேருடன் தூதுக்குழுவாக இலங்கை வந்த முதலாவது வெளிநாட்டு ஜனாதிபதி ஜனாதிபதி ஜூலியஸ் ஆவார்.

இவர்கள் சியரா லியோன் மாநிலத்திற்கு சொந்தமான 9 HV11 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை (20) மாலை 5  மணியளவில் வந்தடைந்துள்ளனர்.

அவர்களை வரவேற்க இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »