Our Feeds


Sunday, October 13, 2024

Sri Lanka

AKD ஆட்டம் - அடுத்த கட்டம்.... | முன்னாள் அமைச்சர்கள் பலரின் பைல்கள் Open பண்ணப்பட்டது.



முன்னாள் அமைச்சர்கள் பலபேரின் சொத்துக்கள் எவ்வாறு பெறப்பட்டன என்பது தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இதன்படி, முன்னாள் அமைச்சர்களான அனுப பெஸ்துவல் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்பில் ஏற்கனவே, நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.


இது தவிர மஹிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஆகியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


இவர்களின் விசாரணைகள் தொடர்பான முன்னேற்றம் விரைவில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »