Our Feeds


Wednesday, October 16, 2024

Zameera

ஹலவத்தை பிரதேசத்தில் வெளிநாட்டு பிரஜைகள் 10 பேர் கைது


 ஹலவத்தை பிரதேசத்தில் உள்ள பிரதான சுற்றுலா விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் 10 பேரை புத்தளம் பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து ஹலவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட 08 ஆண்களும் இரண்டு பெண்களும் எத்தியோப்பியா, சீன, மலேசியா மற்றும் கொரிய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்களால் 282 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 20 கணனிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களிடம் செல்லுபடியாகும் விசா இருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »