Our Feeds


Tuesday, October 8, 2024

Sri Lanka

100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி - 145 குடும்பங்கள் பாதிப்பு!


நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறு 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதனிடையே, புளத்சிங்கள - குடா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த இரு மாவட்டங்களில் 145 குடும்பங்களைச் சேர்ந்த 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »