Our Feeds


Monday, September 30, 2024

Sri Lanka

SLMCயின் முன்னாள் செயலாளர் ஹஸன் அலி மீண்டும் அரசியலில் குதித்தார்!


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிடுவதற்கான களநிலவரங்களை ஆராய்வதற்காக   கூட்டமைப்பின் உயர்பீட கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டம் கட்சியின் பிரதித் தலைவர் எம்.பி.அக்பர் அலி மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி ஹசன் அலி தலைமையில்  நடைபெற்றது.

இதன்போது பல விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைமைத்துவ சபை மற்றும் உயர்பீட உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஆராயப்பட்டன.

மேலும்  கட்சியின் தலைமைத்துவ சபை உயர்பீட உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்தின்படி எதிர்வரும்  பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடும்  தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »