Our Feeds


Wednesday, September 25, 2024

Zameera

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – மேலும் பலரை கைது செய்ய CID விசாரணை


 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் வெளியானதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முறைகேடு தொடர்பில் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »