Our Feeds


Wednesday, September 25, 2024

SHAHNI RAMEES

ஜனாதிபதி அநுரவின் தலைமைத்துவத்தில் நம்பிக்கையுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

 


 இலங்கையின் ஸ்திரத்தன்மையுடனான பாதுகாப்பான எதிர்காலம், அபிவிருத்தி மற்றும் செழிப்புக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவம் உதவுமென தான் நம்புவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்



புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,



 சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பல வருடங்களாக கொண்டுள்ள சிறந்த ஈடுபாட்டை பெரிதும் மதிக்கின்றது.



சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஒரு உறுதியான பங்காளியாக இருப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த இலக்குகளை அடைவதற்கு, ஆதரவளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உதவ தயாராக இருக்கிறது.



இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளில் இலங்கையை மீட்டிடடுக்க சர்வதேச நாணய நிதியம் பெரிதும் உதவியதுடன், அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு சர்வதேச நானய நிதியம் எதிர்பார்த்துள்ளது.



சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர உறவை ஆழப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »