Our Feeds


Sunday, September 15, 2024

Sri Lanka

தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை!


சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்களில் 43 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் , 22 பேர் பொதுநலவாய நாடுகளை சேர்ந்தவர்கள். கூடுதலாக, தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து (ANFREL) 6 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வரும் நாட்களில், மேலும் 34 ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் மற்றும் 3 கூடுதல் ANFREL பிரதிநிதிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை நாடுகளைச் சேர்ந்த 7 பேர் இந்த செயற்பாட்டில்  மேலும் இணைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 22 தேர்தல் தொகுதிகளிலும் விரிவான கண்காணிப்பை உறுதி செய்வதற்காக பார்வையாளர் குழுக்கள் தங்களது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »