Our Feeds


Monday, September 9, 2024

Zameera

வேட்பாளர்களுக்கு விசேட செய்தி


 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக 5 பேர் மாத்திரமே வீடுகளுக்கு செல்ல முடியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு பேரணியாக சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க சட்டம் இடமளிக்கவில்லை அவர் என சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின்  வாகனங்களில் மட்டுமே  ஸ்டிக்கர்களை ஒட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வாகனத்தை தவிர ஏனைய அனைத்து வாகனங்களிலும் ஸ்டிக்கர் அல்லது வேறு பிரசாரங்களை காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »