Our Feeds


Monday, September 30, 2024

Sri Lanka

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தவும் - சாகர காரியவசம்!


ராஜபக்ஷர்கள் திருடர்கள் என்றால் உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தி அதன் உண்மைத்தன்மையினை நிரூபிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று(30) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்...

“.. இந்நாட்டில் அரசியல்வாதிகள் திருடர்கள், இந்நாட்டில் ஊழல்கள் துஷ்பிரயோகங்கள் மலிந்துள்ளன, இதனால் தான் இந்நாடு முன்னோக்கிச் செல்லாது பின்னடைவையே சந்திக்கின்றது என்றெல்லாம் மக்கள் விடுதலை முன்னணியானது (தேசிய மக்கள் சக்தி) தொடர்ந்தும் மக்களுக்கு தெரிவித்து வந்தனர்.

ஆனால் கடந்த காலங்களில் ஊடக சந்திப்புக்கள் நடாத்தி நாடகமாடியோர் மீண்டும் அதே பணியினை செய்கின்றனர். நாம் கூறுவது என்னவென்றால், அரச தலைமையும் கிடைத்து, அமைச்சரவையும் நியமிக்கப்பட்டு அனைத்து வகையான அதிகாரங்களும் கிடைத்தும் மீண்டும் ஊடக நாடகத்தினையே நடத்துகின்றனர்.

ஏதும் ஒரு இடத்தில் திருட்டு இடம்பெற்றிருந்தால், ஊடக நாடகங்களை முன்னெடுக்காது, தயவு செய்து குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு செய்து பொலிஸ் விசாரணைகளை நடத்தி அவர்களை கைது செய்து சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.

ராஜபக்ஷர்கள் திருடர்கள் என கடந்த காலங்களில் கூறியிருந்தீர்கள். 18பில்லியன் டொலர்களை உகண்டாவுக்கு விமானம் மூலம் கொண்டு சென்றதாக தெரிவித்தீர்கள். உடனடியாக இது குறித்து சாட்சிகளை தேடி உடனடியாக விசாரணை குழுவொன்றினை நிறுவி இவற்றை கண்டுபிடியுங்கள். ஏனெனில், இந்தப் பணத்தினை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக நீங்கள் தான் கூறியிருந்தீர்கள். இதனை கண்டுபிடிக்காது விட்டால் இதன் பின்னால் மக்கள் விடுதலை முன்னணிதான் இருக்கும் என மக்கள் நினைப்பார்கள்.

பாராளுமன்ற தேர்தலுக்கும் பழைய கதையினையே கூறி ஊடக நாடகத்தினை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அது நாட்டுக்கு செய்யும் பாரிய அநீதியாகும்
..”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »