Our Feeds


Friday, September 20, 2024

SHAHNI RAMEES

தேர்தலுக்கு முன் அமெரிக்கா பறந்தார் பசில்!


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள்

அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 09/20 காலை சென்றதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.




இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-649 விமானத்தில் பெசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளார்.




இந்த விமானத்தை அணுகுவதற்காக அவர் 206 அமெரிக்க டொலர்களை செலுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள "கோல்ட் ரூட்" முனையத்தில் வசதியைப் பெற்றுள்ளார்.




பெசில் ராஜபக்ச டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்றும், அமெரிக்கா செல்வதற்கு அவர் எப்போதும் இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் என்றும் கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.




- நீர்கொழும்பு செய்தியாளர் -

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »