Our Feeds


Saturday, September 14, 2024

Sri Lanka

அரசாங்கம் மாறுகின்ற போதிலும் ஆட்சியாளர்களில் மாற்றமில்லை - அனுர!


அரசியல் தரப்பினர் நாட்டை பற்றிச் சிந்திக்காமல் தங்களது இலாபம் குறித்துச் சிந்திப்பதனாலேயே நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காலி - அக்மீமன பகுதியில் நேற்று இடம்பெற்று மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக அரசாங்கம் மாற்றமடைகின்ற போதிலும் ஆட்சியாளர்கள் மாற்றமடையவில்லை.

அனைவரும் நாட்டை பற்றிச் சிந்திக்காது தங்களைப் பற்றி மாத்திரமே சிந்தித்து அரசியலில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் மக்களுடன் தொடர்ந்தும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறானவர்களுக்கு தற்போது கொள்கை அடிப்படையிலான அரசியல் ஒன்று இல்லை.

திறைசேரியிடம் உள்ள வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவே நாட்டில் அரசாங்கங்கள் உருவாகின்றன.

தங்களது உறவினர்களுக்கும் அவர்களால் பல அரச பதவிகள் வழங்கப்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »