Our Feeds


Monday, September 30, 2024

Sri Lanka

ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்தே போட்டி - மனோ!


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்னண், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உள்ளிட்ட கூட்டணியின் அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »