Our Feeds


Thursday, September 5, 2024

SHAHNI RAMEES

தேர்தல் விதிகளை மீறிய 22 பேர் கைது..!

 



ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத

நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அக்காலப்பகுதியில் 4 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.


“தேர்தல் தொடர்பான 173 முறைப்பாடுகள் காவல் துறைக்கு பதிவாகியுள்ளன. அந்த முறைப்பாடுகளை குற்றவியல் முறைப்பாடு, தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் என வகைப்படுத்துகிறோம். தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான 119 முறைப்பாடுகள் குற்றவியல் தன்மை கொண்ட 54 முறைப்பாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 22 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு 4 தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.”

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »