Our Feeds


Thursday, September 12, 2024

Zameera

அரசு மருத்துவ அதிகாரிகள் 18 ஆம் திகதி நாடளாவிய பணிப்புறக்கணிப்பு

எதிர்வரும் 18 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
 
பதுளை பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் தமது சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித்த ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்தக் கோரி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
 
நேற்று முன்தினம் கூடிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கூட்டத்தின் போது இந்தத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகதபால தெரிவித்துள்ளார். 
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »