Our Feeds


Sunday, August 25, 2024

Sri Lanka

VIDEO: புத்தளத்திற்கு வந்த “குப்பை ட்ரைன்” - இளைஞர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.



இன்று (25) முதல் தடவையாக பொதி செய்யப்பட்ட குப்பைகளை புகையிரதத்தில் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


வனவாசல, குப்பை பொதி செய்யும் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகள், புத்தளம் அருவக்காடு குப்பை மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


756 இல இன்ஜினை கொண்ட புகையிரதத்தில் 20  கொள்கலன்களில் இந்த குப்பைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.


குப்பைகளை ஏற்றிய கொள்கலன்கள் வனவாசலையில் இருந்து புத்தளம் வரை சென்று அங்கிருந்து அருவக்காடு குப்பை மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


நூர் நகர் புகையிரத நிலையம் அருகே நேற்று மற்றும் இன்று பிற்பகல் இந்த குப்பைகளை புகையிரதத்தில் கொண்டு செல்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »