Our Feeds


Saturday, August 31, 2024

SHAHNI RAMEES

பாகிஸ்தானில் மண்சரிவு - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி!

 

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் நேற்று (30) ஏற்பட்ட திடீர் மண்சரிவால் 12பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



வீட்டின் மேல் கூரை மேல் மண் சரிந்து விழுந்ததில் 3 பெண்கள், 6 சிறுவர்கள், 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளாகவும் உயிரிழந்த 12 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.



உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 



மேலும், பாகிஸ்தானின் அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய பரவலான மழை பெய்யும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »