எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தனக்கு ஆதரவு வழங்கினால் அக்கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷவை பிரதமராக்குவதாக ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கி இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார விஜேசுந்தர குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமைப்பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் ரனில் தற்போது ஜனாதிபதி கதிரையை கட்டிப்பிடித்துகொண்டிருப்பதாக கூறினார்.