தனக்கு ஒன்றும் கிடைக்காவிட்டாலும் தன்னுடன் இருப்பவர்களுக்கு நலவு நடக்கட்டும் என்று நினைக்கும் மிகப் பெரும் பொதுநலவாதி நிமல் லான்சா. முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசினால் கூட நமக்காக நின்று முழுமையாக சண்டையிடுபவர் அவர்தான். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே முஷர்ரப் இதனை தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் பாராளுமன்றம் நுழைந்த நீங்கள் தற்போது நிமல் லான்சாவின் தலைமையிலான குழுவில் இடம் பிடித்துள்ளீர்களே? நிமல் லான்சாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடையாதே என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே முஷர்ரப் மேற்கண்ட பதிலை வழங்கியுள்ளார்.