Our Feeds


Tuesday, July 9, 2024

Sri Lanka

உலகின் மோசமான குற்றவாளியைக் கட்டிப்பிடித்த மோடி – உக்ரைன் ஜனாதிபதி ஆதங்கம் !


உலகின் மிக மோசமான குற்றவாளியை மோடி கட்டிப்பிடித்தது ஏமாற்றமளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷ்யா இடையேயான 22ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார்.


ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் மோடி இன்று (09) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.


இந்நிகழ்வு குறித்து உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,


“உக்ரைனில் இன்று ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் 13 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இளவயது புற்றுநோயாளிகள் இருக்கும் குழந்தைகளுக்கான வைத்தியசாலை மீது ரஷ்ய ஏவுகணைத்யை தாக்கியுள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறான நேரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிபிடித்தது மிகவும் ஏமாற்றமாகவும், அமைதியின் மீது விழுந்த அடியைப் போலவும் இருக்கின்றது” என்று பதிவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »