Our Feeds


Wednesday, July 10, 2024

Sri Lanka

கிளப் வசந்த கொலை - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்



கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 07 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த  08ஆம் திகதி அன்று அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த என்றழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டார்.

அப்போது பிரபல பாடகர் கே. சுஜீவவின் கணவரான நயன வசுலாவும் உயிரிழந்துள்ளதுடன், கே.சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி, மற்றுமொரு பெண்ணும் ஆணும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »