Our Feeds


Monday, July 8, 2024

SHAHNI RAMEES

என்னால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்...! - தம்மிக்க பெரேரா

 

நாட்டின் பொருளாதாரத்தில் கட்டமைக்கப்பட்ட அமைப்பு குறித்து எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு அறிவிக்காத காரணத்தால் 44% மக்கள் இன்னும் வாக்களிக்க முடிவு செய்யவில்லை எனவும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் யோசனைகளை நடைமுறைப்படுத்தும் முறைமையின்படி நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே நபர் நான் என நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நிறுவப்பட்ட டி.பி.கல்வி நிலையத்தின் தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் கல்வி பயின்ற புதிய முதுநிலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தம்மிக்க பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கையின் தற்போதைய கல்வி முறைக்குப் பதிலாக சர்வதேச கல்விக்கு நிகரான கல்வி முறை இலங்கையிலும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »