Our Feeds


Wednesday, July 24, 2024

Sri Lanka

அரசியல் நிகழ்ச்சிகள் நிறுத்தம் - தேர்தல் ஆணைக்குழு



அரசியல் தலையீட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிட்டத்தட்ட முப்பது நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆணைக்குழுவின் உத்தரவால் நிறுத்தப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் அரசியல் தலையீடுகள் காரணமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கான பொருட்கள் விநியோகம், நியமனங்கள் உள்ளிட்ட பலவேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி நெருங்கி வருவதால் ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த நாட்களில் சுதந்திர தேர்தலுக்கு இடையூறாக நடக்கும் சம்பவங்களை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதிகாரிகள் குழு இதில் கடும் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »